பொன்னம்பலவாணேசுவரர் கோயில்

பொன்னம்பலவாணேசுவரர் கோயில்

பொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில்.



இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.

இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன இந்த ராசகோபுரம் வண்ணம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.

மூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.

வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.

ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசுவரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம்.

ஸ்ரீபொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் கொழும்பு நகரின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இந்த இந்து இலங்கையின் கொழும்பில் உள்ள கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவலிங்க அமைப்பில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் 1915 ஆம் ஆண்டு கருங்கற்களால் (கிரானைட்) இந்திய சிற்பங்களால் கட்டப்பட்டது. இக்கோயில் முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்டு, பார்க்கவும் வழிபடவும் தகுந்த இடம். இதன் அமைப்பு இந்தியாவின் தமிழ்நாட்டுக் கோயில்களை நினைவூட்டும். உண்மையில் இந்த கோவில் மனித உடல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. கோபுரத்தின் உச்சியில் உள்ள கோபுரத்தின் நுழைவாயிலில் 9 கதவுகள் உள்ளன.

நுழைவுக் கட்டணம் அல்லது நுழைவுச் சீட்டுக்கு நீங்கள் செலுத்தத் தேவையில்லை. கோயிலுக்கு இரண்டு முக்கிய நுழைவாயில்கள் உள்ளன. உங்கள் விலையுயர்ந்த பாதணிகளை வைத்திருக்க, நுழைவாயிலில் ரூ. 50/- வரை செலுத்தி, உங்கள் காலணிகளைத் திரும்பப் பெற எண்ணுடன் கூடிய டோக்கனைப் பெறுங்கள். சிறப்பு பூஜை நாட்களில் ஆண் பார்வையாளர்கள் தங்கள் டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

பிரதான கோவிலுக்குள் நுழைவதற்கு முன், கோவிலின் உள் நுழைவாயிலின் இடதுபுறத்தில் கிடைக்கும் குழாய் நீரில் உங்கள் கால்களைக் கழுவவும். நீங்கள் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ வருகை தருவதாக இருந்தால் தினசரி பூஜை நிகழ்வுகளில் பங்கேற்கலாம். பெண்கள் ஒருபுறம் நின்று கடவுள் சிலையைப் பார்க்கலாம் , ஆண்கள் எதிர்ப் பக்க வரிசையில் பார்க்கலாம்.

இந்த கோவிலுக்கு செல்ல சிறந்த நேரம்.

  • காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை
  • மாலை 4:30 மணி முதல் இரவு 08:00 மணி வரை

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.