இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடும் மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவியை விடுவித்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதோடு, இதில் 500,000 யூரோ சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

